ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சினால் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரைவாழைச்சேனை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.


வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.சந்திரபாலன், வாழைச்சேனை சமூக சேவை உத்தியோகத்தர் அ.நஜீம், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.லலிந்திரன், கல்குடா மத்திய கிளை செயலாளர் ந.நகுலேஸ்வரன், கல்குடா தொகுதி இளைஞர் அணி தலைவர் வி.சுரேந்திரன், ஆறுமுகத்தான் குடியிருப்பு இளைஞர் அணி தலைவர் எஸ்.மிதுனன், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சமூக சேவைகள் அமைச்சின் வைத்தியர்களால் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஐநூறுக்கு மேற்பட்டோருக்கு மூக்கு கண்ணாடிகளும், அங்கவீனமாக நான்கு பேருக்கு சக்கர நாட்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்குடாத் தொகுதியிலுள்ள நான்காயிரம் பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டதாக அமைப்பாளர் எஸ்.சந்திரபாலன் தெரிவித்தார்.