பியர் தொடர்பான யோசனைக்கு ராஜித கடும் எதிர்ப்பு!

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பியர் தொடர்பான யோசனைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் இந்த யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சரிடம் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ராஜித நேற்று (திங்கட்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவறான புள்ளிவிபர தரவுகளைக் கொண்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டில் சட்ட விரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் தவறானவை.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மதுப் பாவனைக்குத் துண்டப்படுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் துணைபுரியும் அபாயம் காணப்படுகின்றது” என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.