கோறளைப்பற்று வடக்கு,வாகரை பிரதேச சபையின் புதிய செயலாளராக திரு.ஜோசப் சர்வேஸ்வரன் கடமையேற்பு

(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின்  செயலாளர் ஜோசப் சர்வேஸ்வரன் இன்றைய தினம் (14.11.2017) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கான புதிய செயலாளராக கடமையேற்றுள்ளார். கடந்த 11.11.2017 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் சில உள்ளூராட்சி நிறுவனங்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற அடிப்படையில் இந்த கடமையேற்பு நிகழ்வு இன்றைய தினம் வாகரை பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
 
 
இதன்போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் புதிய கடமை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட செயலாளர் வாகரை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவராலும் உவகையுடன் வரவேற்கப்பட்டிருந்தார். மேலும் இன்றைய தினம் பி.ப.02.30 மணிக்கு பிரதேச சபையின் சகல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்இ நூலகர், நூலக உதவியாளர்கள் என சகலரையும் சந்தித்து அறிமுக நிகழ்வொன்றினையும் நடாத்தியிருந்தார். இதன்போது தனது எதிர்கால சேவைகளையும், அவற்றுக்காக நிறுவனத்தின் கடமையாற்றும் சகலரது ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவுள்ள விதம் பற்றியும் தெளிவுபடுத்தினார். அத்துடன் அப்பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் சி.இந்திரகுமாரது நிருவாக செயற்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உதவிய அதே வகையில் புதிய செயலாளரது சகல வேலைத்திட்டங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் கருத்தினை பறிமாறிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய செயலாளரது கடமையேற்பு தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை காட்டும் சில புகைப்படங்கள்.