மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது


மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர்  காத்தான்குடி நகரில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) இடம்பெற்ற இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மதுவரித் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து, அவர் விற்பனைக்காக எடுத்துச் சென்ற 500 கிராமுக்கும் கூடுதலான கஞ்சா மீட்கப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, தாம் இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.