வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்.ககு.வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று பாடசாலை அதிபர் எஸ். மோகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, ஏறாவூர்ப்பற்று 02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். சிவகுரு, கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன்  மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2015, 2016ம் ஆண்டுகளில் கல்வி, விளையாட்டு, மற்றும் இதர செயற்பாடுகளில் பாடசாலை, வலயம், மாவட்ட மாகாண மட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். பாடசாலை சமூகத்தினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் 2017ம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு 100000.00 ரூபா மூலம் வழங்கப்பட்ட அதிபர் காரியாலய தளபாடங்கள் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.