தனுஸ்கோடியில் ஆளில்லாது இலங்கை படகு கரையொதுங்கியது: விசாரணைகள் தீவிரம்!

தனுஸ்கோடி, ஒத்ததாளை பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில், கரையொதுங்கியுள்ளமை குறித்து தமிழக பாதுகாப்புத் தரப்பு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, அந்த பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர பாதுகாப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பைபர் படகு இலங்கையின் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தது எனவும் அதில் சட்ட விரோதமான முறையில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்காலம் எனவும் தனுஸ்கோடி கடலோர பாதுகாப்பு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணைகளை, கீயு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் கைபற்றப்பட்ட படகு கடலோர பாதுகாப்பு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.