ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்.

(சாரங்கன்)

 நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு நீரழிவு நோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையிலான ஊர்வலம் மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரி வைத்தியர் அல்மேடா தலைமையில் இடம் பெற்றது.


 இந்த நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி  குழு மற்றும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் அத்துடன் பொதுமக்களுக்கான விசேட இரத்தப்பரிசோதனையும் இடம் பெற்றது இந் நிகழ்வுக்கு Nestle health science நிறுவனத்தினரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.