தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு காணப்பட்டிருந்தால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


பௌத்த மக்கள் அதிகம் வாழும் இந்த நாட்டில் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைகள் ஏன் வழங்கப்படவில்லை எனவும் இதன்போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையான மக்கள் ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.