மோனிங்ஸ்டார் பாலர் பாசாலையின் 10வது ஆண்டு நிறைவு விழா...


மட்டக்களப்பு, புளியந்தீவு மோனிங்ஸ்டார் பாலர் பாடசாலையின் 10வது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த ஒளிவிழா நிகழ்வும் இன்றைய தினம் பாலர் பாடசாலை அதிபர் திருமதி புஸ்பராணி லோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக புளியந்தீவு புனித மரியாள் பேராலய உதவிப் பங்குத் தந்தை அருட்தந்தை நிகஸ்டன் அடிகள், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், மட்/ ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார், மட்டக்களப்பு சமுக விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாலர் பாடசாலையின் 10வது அண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பத்து வருடங்கள் இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களை ஒன்றிணைத்த வகையிலான கலை நிகழ்வுகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலைநிகழ்வுகள், சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்குதல், அதிதிகள் கௌரவிப்பு, ஆசிரியர்கள் கௌரவிப்பு எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றதுடன் ஒளி விழா நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாகப் பாலன் பிறப்புக் காட்சியும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
பாலர் பாடசாலை சமுகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிகழ்விற்கான சிறப்பு நினைவுச் சின்னங்களை மட்டக்களப்பு சமுக விழிப்புணர்வு ஒன்றியம் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.