ராஜாத்தியின் 'என் கொலைகாரர்கள்' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளரும் 'ராஜாத்தி' என்ற புனை பெயரில் எழுதும் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆய்வாளருமான வெள்ளத்தம்பி தவராஜா வினால் எழுதப்பட்ட 'என் கொலைகாரர்கள்''  என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை 09.12.2017 'படி' கலாசார வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின் தலைமையில் நடைபெற்றது.



இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர், எழுத்தாளர் உமா வரதராஜன், மாவட்ட உதவி திட்டப் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.