கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வு

...

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் கிறிஸ்தவ சங்கத்தினரால் வருடாவருடம் தேவை நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் நடாத்தப்படும் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வானது மட்ஃ பெரியபுல்லுமைலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் பிரியகாந்த தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தை ஏ. நவரெட்ணம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன், பிரதிப் பதிவாளர் எ. பகீரதன், உதவிக் கணக்காளர் எஸ். பிரம்மாகரன், ஊழியர் சங்கத் தலைவர் இரா. இராஜசேகரம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களினதும், கிழக்குப் பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.