கல்லடி ஹரி சிறுலர் இல்லத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திலிருந்து கல்வி பயின்ற மாணவர்களில் 2017 இல் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையிலிருந்து  நான்கு (04)  மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹரி சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு.ச.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நாளை 10.12.2017 அன்று காலை 10.00 மணிக்கு ஹரி இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இதற்கு முன்னதாகவும் ஹரி இல்லத்திலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளதுடன் பொறியியல் பீடத்திலும் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.