மணல் ஏற்றி சென்ற கனகரக வாகன சாரதி மீது விசேட அதிரடிப்படையினர் தாக்கல்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் மணல் ஏற்றி சென்ற கனகரக வாகன சாரதி மீது விசேட அதிரடிப்படையினர் தாக்கிய சம்பவம் கடத்த திங்கள் மாலை இடம்பெற்றுள்ளது.

உரிய அனுமதிப்பத்திரத்துடன் கனகரக வாகனத்தில் மண் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் சிவில் உடையில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மணல் ஏற்றறுவதற்கான அனுமதிப்பத்திரத்தினை கேட்டிருந்த போது அனுமதிப்பத்திரத்தை அவர்களிடம் காண்பித்த பிற்பாடு நேரக்கட்டுப்பாட்டை மீறியதாக கூறி சாரதி மீது தாக்குதல் நடத்தியாபகவும் பின்னர் சம்பவம் பற்றி வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் சாரதி களுவாஞ்சிகுடி ;ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சும்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.