பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுவன் பலி!


(செ.துஜியந்தன்)

பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சசிகரன் கபிஸ்டன்  (4வயது) சிறுவன் டெங்கு காய்ச்சலால்  பலியாகியுள்ளார்.

இச் சிறுவனின் குடும்பம் பெரியநீலாவணையில் வசித்து வந்த நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 28ஆம் திகதி வைத்தியர் ஒருவரிடம் காண்பித்துள்ளனர். அதன்பின் கடந்த 04ஆம் திகதி கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி 8ஆம்திகதி  உயிரிழந்துள்ளார்.


இச் சிறுவனின் மரணம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.