பெரியகல்லாற்றில் ஸ்பாக்கஸ் பெண்கள் இல்லத்தின் ஒளி விழா.

[ ரவிப்ரியா ]
பெரியகல்லாறு மெதடிஸ்த சபையின் ஸ்பார்க்ஸ் பெண்கள் இல்லத்தின் மாணவர்களின் ஒளிவிழா ஆலய குரு அருட்திரு ஜே.ஜே.ஞானரூபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக சேகர முகாமைக்குரு அருட்செல்வி ஜோதினி சீனிததம்பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.  கௌரவ விருந்தினர்களாக அருட்தந்தை ஜெரிஸ்ரன் வின்சன்ர், அருட்திரு அந்தனி சுதாகர் ஆகியோh கலந்து கொண்டனர்.

இல்ல மாணவிகளின் நடன, நாடக, பாலன் பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கும் நத்தார் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. வித்தியாசமான மறையில் இடம்பெற்ற பாலன் பிறப்பு நடன நிகழ்வு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஜேசுவின் பிறப்பு பற்றிய சிந்தனைகள் அதிதிகளால் சிறப்பாக எடுத்துரைக்கப்படடது.