தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் விரிசல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே தொடர்ந்தும் பலசுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலை தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் திங்கள்  (04) மாலை நடபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்குறிப்பிட்டார்.