ஓய்வுபெற்றுச் செல்லும் கோட்டக்கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வு

(வரதன்)மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கடந்த பல வருடங்களாக கல்விப் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மகாஜனக் கல்லூரியில் மட்டு வலய கோட்டக்கல்வி அதிகாரி ஏ.அருட்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது. இங்கு மட்டு கல்வி வலயத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளராக சிறந்த சேவையாற்றிய எஸ் சுகுமாரன் மண்முனை வடக்கு அதிபர்கள் நலன்புரிச் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

கோட்டக்கல்வி அதிகாரியாகக் பல வருடங்கள் கடமையாற்றி சகல பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் பரீட்சைப் பெறுபேற்றுக்கும் உழைத்து பாடசாலை மாணவர்கள் அனைவரையும் நல்வழப்படுத்தலுக்கு அதிபர்களுடன் நின்றுழைத்த இவ் அதிகாரியின் சேவையினை மாவட்ட கல்விமான்கள் நினைவு கூர்ந்து அவரின் சேவையினைப் பாராட்டி பல பரிசில்களையும் வழங்கியதோடு பொன்னாடை போர்த்தும் அதிகாரியினை கௌரவித்தனர். 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்து கொண்டதுடன் இங்கு வின்சென்ற் தேசிய பாடசாலையின் கடந்த 5 வருடங்களாக கடமையாற்றிய அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் ஓய்வு பெற்றுச் சென்ற பாடசாலை அதிபர்களும்கௌரவிக்கப்பட்டனர்.மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.