வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா


(சா.நடனசபேசன்)
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வு 6 ஆம் திகதி புதன்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர்களான செல்வி.வி.நிதர்சினி, ஜனாபா எம்.எச்.றியாஸா, நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து , கெப்சோ அமைப்பின் பணிப்பாளர் அப்துல் ஜப்பார்,  வேள்ட்விசன் நிறுவனத்தின் நாவிதன்வெளி திட்ட அமைப்பாளர் ஏ.தனுராஜ் ,நாவிதன்வெளி இலங்கைவங்கி முகாமையாளர் கு.சசிதரன், ஆசிரிய ஆலோசகர்களான கே.இரத்தினேஸ்வரன், இ.குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.