சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மாபெரும் பேரணி.


மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் காணாமல் வலிந்து ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களால் மாபெரும் பேரணி நாளை 10.12.2017 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 9.00 மணியளவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லடிப்பாலத்தின் அருகே ஆரம்பிக்கும் இப்பேரணி காந்தி பூங்காவை அடைந்து தமது கோரிக்கைகளை அடங்கிய மகஜர் உரிய தரப்பினருக்கு கையளிப்பதுடன் நிறைவு பெறும்.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், ஊடக சங்கத்தினர் உட்பட பல பொது அமைப்புக்கள இப்பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மட்டக்களப்பு மக்களின் பங்குபற்றலையும் நாளைய தினம் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்