மட்டு. மாநகரசபையின் இருதயபுரம் பாலர் பாடசாலையில் நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வு

(பத்மா)

மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் இருதயபுரம் பாலர் பாடசாலையில் ஒளி விழா நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் திரு.நா.மணிவண்ணன் கலந்து கொண்டதுடன் மாநகர செயலாளர் ஜனாப் ஷியாகுல் ஹக், மாநகர கணக்காளர் திரு.ஏ.எஸ்.ஜோன்பிள்ளை மற்றும் சனசமூக உத்தியோகத்தர் திரு.எஸ்.சந்திரகுமார் உட்பட அதிதிகள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.