கிராமத்துக்குள் புகுந்த யானை : ஒருவா் பலி; இருவர் காயம்



 பொத்துவில் பிரதேசத்திலும் திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியிலும் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற வெவ்வேறு யானைத் தாக்குதல்களில் ஒருவர் பலியாகியுள்ளார் என்பதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
பொத்துவில், அல்-ஹூதா கிராமத்துக்குள் புகுந்த யானையொன்று தாக்கியதில் முகம்மது இஸ்மாயில் சலீம் (வயது 45) என்பவர் பலியாகியுள்ளாரென, பொத்ததுவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் காமால்டீன் பரீனா (42 வயது), எம். பர்ஸான் (25 வயது) ஆகியோரும் காயமடைந்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அல்-ஹூதா கிராமத்துக்குள் நேற்றுக் காலை 5 மணியளவில் புகுந்த காட்டு யானை, பொத்துவில் பிராதான வீதி, மன்முனை, கொடிமரப்பள்ளி ஆகியவற்றை ஊடறுத்து, முகுதுமகா விகாரைப் பகுதிக்குள்ளும் நுழைந்துள்ளது.
யானை, மதில் சுவர்கள் சிலவற்றையும் உடைத்து சேதப்படுத்திய நிலையில், பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.