த.தே.கூ அரசாங்கத்தில் இணையவுள்ளது ?


தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மஸ்கெலியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கொழும்பில் கடந்த வாரத்தில் கதை அடிபட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. வெளியிலிருந்து ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புள்ளது அதேவேளையில் அரசாங்கத்திலிருக்கும் ஒரு பிரதான கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுமானால், அதை ஈடு செய்வதற்காக அரசாங்கத்திற்கு உள்ளே வந்து அரசாங்கத்தின் ஒரு அங்கமாக பங்காளியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்ற ஒரு கதை கொழும்பில் அடிபட்டது.

அப்படி நடைபெற்றால் அதை நான் நிச்சயம் வரவேற்பேன். அந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித அழுத்தமுமின்றி சுயாதீனமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் ”

என கூறினார்