வின்சென்ட் தேசிய பாடசாலை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(வரதன்)
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட வின்சென்ட் தேசிய பாடசாலையிலும் அதன் அதிபர் திருமதி s.p ரவிச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.இதில் இன்று சுமார்100 மாணவர்கள் 02ம் ஆண்டு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டு கொடுத்து பாடசாலை பான்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்


இல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வலயக் கல்வி பணிப்பாளர். K.பாஸ்கரன் கலந்து கொண்டார். இங்கு இறை வழிபாடு வரவேற்புரை தொனிப்பொருள் வாசகம் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி ரா.கனகசிங்கம் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்