டெங்கு நோய் தாக்கம்- 12 வயது சிறுவன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

தீவிர டெங்கு காய்ச்சல் காரணமாக 12 வயது மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்கும் என். எம். எம். முஆத் என்ற மாணவனே இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.