பட்டிருப்பு கல்வி வலயத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஒன்றுகூடல்

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுகிர்தராஜன் தலைமையில் களுவாஞ்சிகுடி சிவகாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. 
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகஸ்த்தர், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், சிற்றூழியர்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஒன்று கூடல் நிகழ்வினை மகிழ்வுடன் கொண்டாடினர்.
இவ் ஒன்று கூடல் நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டத்தக்க நிகழ்வுகள், நகைச்சுவை நிகழ்வுகள், பாடல்கள் போன்றன இடம் பெற்றன.