காலநிலை- வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் கிழக்கு , ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாணம் மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் ஓரளவு மழைபெய்யும். பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பல மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்று திணைக்களம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்கரைபகுதிகளில் ஓரளவு மழைபெய்யும். ஏனைய கடற்கரையோர பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.