கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களத்தினால் சுயதொழில் முயற்சி மற்றும் தற்செயலாக ஏற்பட்ட தீயினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கும் நிதி வழங்கி வைப்பு

(ஜெ.ஜெய்ஷிகன்)

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தற்செயலாக ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்களை இழந்த ஏழு பயனாளிகளுக்கும் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கென நான்கு பேருக்குமாக மொத்தம்; இரண்டு லட்சத்து  நாற்பதனாயிரம் ரூபாவுக்குமான வங்கிப் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (17) காலை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.பிருந்தன் தலைமையில் நடைபெற்றது.

கறுவாக்கேணி சமூகபராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், மத்தியரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கஜெந்தி ஆகியோர்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வங்கிப் புத்தகங்களை  கையளித்தனர்.