அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் களப்பு பகுதியில் மீட்பு


(க-சரவணன் )
மட்டக்களப்பு நாவலடி புதியமுகத்துவாரம் களப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த களப்பு கரைப்பகுதியில் பகுதியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் சென்று; அடையாளம் காணப்படாத சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் முதியவர் எனவும் அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.