காலநிலை

தற்பொழுது நிலவும் வறட்சியுடன் காலநிலை ஓரளவுக்கு தணிந்து நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் நாட்டின் சில பிரசேதங்களில் மழைபெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யுக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் ஆங்காங்கே பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலைவேளையில் பனிமூட்டத்துடனான காலநிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்றுவீசுக்கூடும் இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.