ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனின் தேர்தல் பரப்புரை அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் கிராம சேவகர் பிரிவுகளான அரசடி, கோட்டைமுனை, தாமரைக்கேணி பிரதேசங்களை உள்ளடக்கிய 10 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் சிரேஷ;ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதனின்  தேர்தல் பரப்புரை அலுவலகம் நேற்று மாலை (18) மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சாம்பசிவம் சிவாச்சாரியார், புளியடிக்குடா சென் செபஸ்தியார் தேவாலய பங்குத் தந்தை லோரன்ஸ், கோட்டைமுனை யூசூபியா பள்ளி வாசல் பிரதம இமாம் இலியாஸ் மௌலவி ஆகியோரின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் உறுப்பினர்களான கோவிந்தன் ஜனா கருணாகரன், பிரசன்னா இந்திரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.