பஸ்ஸில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது

கொழும்பிலிருந்து அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் போதைப் பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (19) அதிகாலை 05.30 மணியளவில் அம்பாறை விசேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.