குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் தேசிய பொங்கல் விழா

(செ.துஜியந்தன்)


மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பிரிவிலுள்ள குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் இன்று 2017-01-19 வெள்ளிக்கிழமை தேசிய தைப் பொங்கல் விழா நடைபெற்றது.

அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குருமண்வெளி ஸ்ரீ மகா விஸ்ணுஇ ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயங்களின் பிரதம குரு சிவஸ்ரீ வ.கு.யோகராசா குருக்கள் கலந்துகொண்டு சூரியபகவானுக்கு
  விசேட பூசை வழிபாடுகளையும் தைத்திருநாள் தொடர்பான பாரம்பரிய விளக்கம் பற்றியும்  மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

இங்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட தேசிய தைப்பொங்கல் தொடர்பான விசேட அறிக்கை அதிபர் க.சத்தியமோகனால் வாசிக்கப்பட்டது.