தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஆறாம் வட்டாரம் கறுவப்பங்கேணி-இருதயபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமது வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வேட்பாளர் காந்தன் தெரிவித்தார்.

இதன்போது அங்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளருமான செல்வி மனோகரும் நிலைமையினை பார்வையிட்டுள்ளார்.