அவுஸ்திரெலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் திருநாள் சிறப்பு அஞ்சல் தலைகள்



(Satha Nirmalarajan)
ஆஸ்திரேலிய தமிழர் வரலாற்றில் முதன்முறையாக உழவர் திருநாளான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது .

இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வில் ஒரு அவுஸ்திரேலிய வெள்ளி பெறுமதியான சிறப்பு அஞ்சல் தலைகள் திருமதி ஜுலி ஒவென்ஸ் (பரமாட்டா நாடாளுமன்ற உறுப்பினர், நியூ சௌத் வேல்ஸ் ) அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.


ஆஸ்திரேலிய கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் இவ்வரிய நிகழ்வினை மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்திருந்தது.

இந்த உழவர் திருநாள் ஆஸ்திரேலிய தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வென்று கூறினால் அது மிகையாகாது.