தேசிய நல்லினக்க அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களிடையே இனநல்லுறுவை ஏற்படுத்தும் முகமாக தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வு இடம்பெற்றுது.மட்டக்களப்பு கல்விவலயத்தி குற்பட்ட மட்- பிள்ளையாரடி நல்லையா வித்தியாளத்தில் அப்பாடசாலையின் அதிபர் அ.குணரெட்னம் தலைமையில் இந்து காலச்சாரமுறைப்படி இப் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் ஏறாவுர் ரகுமானிய பாடசாலை மாணவர்கள் இதில் கலந்து கொண்டமை சிறப்புஅம்சமாகும். பாடசாலை வளகத்தில் கோலமிட்டு அழங்கரித்து இனநல்லுறவு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது இதர சமுகத்தின் மாணவர்கள் தைப்பொங்கலின் முலம் சூரியனுக்கு நன்றி செலுத்து கருத்தை அறிந்து கொள்ளகூடிய வகையில் இவ்நிகழ்வு அமைந்திருந்தது.இங்கு இப்பாடசாலையின் அதிபர் அ.குணரெட்னம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது.இதில் இப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.