கல்முனையில் 12 ஆம் வட்டாரத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரின்; காரியாலயம் திறந்து வைப்பு

கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் க.சிவலிங்கத்தின் வேட்பாளர் காரியாலயம் இன்று 9 புதன்கிழமை கல்முனை 3 சின்னத்தம்பி வீதியில் திறந்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உட்பட் கல்முனை மாநகரசபையில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் இரட்டை அங்கத்தவர்களைக் கொண்ட வட்டாரமாக கல்முனை 12 ஆம் வட்டாரம் இருப்பதினால் இவ் வட்டாரத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் தமிழ்மக்கள் மிகவும் விழிப்போடு செயற்படுவதுடன் தமது வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.