'நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்' என சிறுமி எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ! சிறுமியின் மரணத்தில் சந்தேகம்

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (13) மாலை  12 வயதுச் சிறுமியொருவரின் சடலம் மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதுபற்றி விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறு பரிசோதனை அறிக்கைக்காகக்  காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

உடற் கூறு பரிசோதனைக்காக சடலம், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியின் தாய், கணவன் பிரிந்து சென்ற நிலையில், இன்னொருவரைத் திருமணம் செய்துள்ளதாகவும் சிறுமி தனது தாய் மற்றும் சிறிய தந்தையுடனேயே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி கடைசியாக 'நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்' என்ற வசனத்தை எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, பல கோணங்களில் விசாரணைகளைப் பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.