கடையொன்றை உடைத்து கொள்ளையிட்ட சந்கேத்தின் பேரில் 25 வயது இளைஞன் கைது

திருகோணமலையில் கடையொன்றை உடைத்து 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சந்கேத்தின் பேரில் 25 வயது இளைஞன், நேற்றிரவு (23) கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.


நான்காம் கட்டை, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கடை உரிமையாளர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.