த.தே.கூ பிரதேச அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இந்த தேர்தல் ஒரு களம் ஆக இருக்கிறது



புளியந்தீவு தெற்கு வட்டார இளைஞர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அந்தோனி கிருரஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வட்டார இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நேற்றைய  தினம் புளியந்தீவு தெற்கு வட்டார தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் புளியந்தீவு தெற்கு வட்டார வேட்பாளர் அந்தோனி கிருரஜன், புளியந்தீவு தெற்கு வட்டார இளைஞர்கள் மற்றும் புளியந்தீவு மரியாள் பேராலய பங்கு இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசிய   கூட்டமைப்பினால் பிரதேச அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும் என்பதை அனைவருக்கும் நிரூபிப்பதற்காக இந்த தேர்தல் ஒரு களம் ஆக இருக்கிறது . அனைத்து கடசிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பை  விமர்சிப்பதனையே  குறியாக வைத்துள்ளன . அத்தனை விமர்சனங்களுக்கும் மத்தியில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது அத்துடன் எமது பிரதேச அபிவிருத்தி தொடர்பிலம் முழு மூச்சுடன் செயட்பட வேண்டும் என வேட்ப்பாளர் கிருஜன் தெரிவித்தார்
இதன் போது தேர்தல் தொடர்பில் தொடர்ந்து செயற்பட வேண்டிய முறைமைகள், பிரச்சார செயற்பாடுகள் போன்றன பற்றி வேட்பாளர் கிருரஜன் அவர்களால் இளைஞர்களுக்கு நெறிவுறுத்தப்பட்டதுடன், பிரதேச பெரியவர்களையும் ஒன்றிணைத்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.