ஆலையடிவேம்பில் 100 வயதைக் கடந்து வாழும் முதியவருக்கு விசேட உதவிக் கொடுப்பனவு



ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட அளிக்கம்பை, தேவகிராமத்தில் வசிக்கும் முத்து முத்துச்சாமி என்ற 105 வயதான முதியவருக்கு சமுக சேவைகள் அமைச்சின் தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் விசேட உதவிக் கொடுப்பனவான இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தனது பேத்தியுடன் பிரதேச செயலகத்துக்குச் சமுகமளித்திருந்த குறித்த முதியவர் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸனிடமிருந்து குறித்த கொடுப்பனவுக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டதுடன், கடந்த ஆண்டும் இவ்வாறானதொரு கொடுப்பனவை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சிவானந்தம் ஆகியோரும் உடனிருந்தனர்.