மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லுரியில் புதிதாக நிரந்தர பிரதி அதிபர் பதவியேற்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சியை பலதரப்பட்ட மாணவர்களுக்கு, முழு அரச அங்கீகாரத்துடனான தேசிய தொழில் தகைமைகளை(NVQ) பலதரப்பட்ட சான்றிதழ், டிப்ளோமா, உயர் தேசிய டிப்ளோமா போன்ற கற்கை நெறிகளுக்கு வழங்கும் மாவட்டத்தின் முன்னணி நிறுவனமான மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரியின் வரலாற்றில் நிரந்தர பிரதி அதிபர் பதவிக்கான வெற்றிடமானது அண்மையில் நிரப்பப்பட்டது. இந்நிகழ்வானது கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பதவிக்காக தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் சிபார்சில் பொதுச் சேவை ஆணைகுழுவினால்  நிரந்தர பிரதி அதிபராக திரு.த.பாஸ்கரராஜா SLTES ,M.Sc, PGDE & B.Sc அவர்கள் 15.02.2018 திகதி அன்று தனது பதவியினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

இன் நிகழ்வானது தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபர் திரு.க. பிரேமரஞ்சன் தலைமையிலும், பொறியியல் துறை தலைவர் திரு.வி.விமல்ராஜா, வணிகம் மற்றும் ஆங்கிலத்துறை தலைவர் திரு.நா.சிவநாதன், தொழில்துறை தலைவர் திரு.ம.பத்மபிரகாஸ் மற்றும் பதிவாளர் திரு.க.மதிவணணன், அவர்களின் ஒத்துளைப்புடனும், கல்லூரியின் விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடனும் வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் பலரும் திரு.த.பாஸ்கரராஜா அவர்களுடைய கல்வி புலமை, கல்லூரி சமூகத்துடனான பங்களிப்பு, அர்பணிப்புடனான கடந்தகால சேவையினை பாராட்டியும், ஆசியினையும், வாழ்த்துதல்களையும் வழங்கினர் தொடர்ந்து  இனிதே நிறைவு பெற்றது.