களுதாவளை இராமகிருஷ்ணரில் சிறுவர் விளையாட்டு விழா


(சித்தா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான சிறுவர் விளையாட்டு இன்று விழா மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது. இவ் விழாவினை பாடசாலையின் அதிபர் திரு.சி.சசிதரன் அவர்கள் தலைமைதாங்கி வழிநாடாத்திச் சென்றார். இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஞானராசா அவர்களும், விசேட அதிதியாக மண்முனை தென் எருவில்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா அவர்களும், 
சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பா. வரதராஜன் மற்றும் ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.த.சபாரெத்தினம் அவர்களுடன் கௌரவ அதிதிகளாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரும், களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி சிறிமுருகன் ஆலய பரிபாலன சபையினரும், களுதாவளை ஆரம்ப மருத்துவப் பிரிவு வைத்தியர் செ.யோகராசா போன்றோர் கலந்து விளையாட்டு விழாவினைச் சிறப்பித்தனர். 
அத்துடன் அண்மைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் கலந்து இவ் சிறுவர் விளையாட்டை மேலும் சிறப்பித்தனர். 
அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகள் முறையான திட்டமிடலுக்கு அமைவாக ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நடைபெற்றமை அனைவரின் பாராட்டுக்குள்ளானது. இறுதியாக மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவுடன் நிகழ்வுகள் யாவும் மகிழ்வுடன் நிறைவுற்றது