தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணத்திற்கு துறைநீலாவணை மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்


(எஸ்.நடனசபேசன்)
தமிழ் மக்களினது உரிமையினை வென்றெடுப்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பயணத்திற்கு துறைநீலாவணை மக்கள் எப்போதும் துணை நிற்பார்களே தவிர ஏனைய கட்சிகளின் பணத்திற்கோ சலுகைக்கோ ஒருபோதும் சோரம் போகமாட்டார்கள் என்பதனை தேர்தல் முடிவு சொல்லி இருக்கின்றது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் துறைநீலாவணை வட்டாரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற க.சரவணமுத்து தெரிவித்தார்.


நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிதெரிவித்து ஆதரவாளர்கள் மத்தில் கருத்துத் தெரிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில்

தமித் தேசியத்திற்கும் போராட்டத்திற்கும் உரமூட்டிய துறைநீலாவணை மக்கள் ஒருபோதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை மறக்கமாட்டார்கள் என்பதனை நடைபெற்றுமுடிந்த தேர்தலில் பறைசாற்றியுள்ளனர்.
 துறைநீலாவணை மண்ணையும் மக்களையும் மறந்துவிடமுடியாது இங்கு வாழும் எமது மக்கள் தமிழ்த் தேசியத்தில் மிகவும் பற்றுறுதி கொண்டவர்கள் என்பது இன்று நேற்ரல்ல தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் தாக்கள் தமிழ்மக்களின் உரிமைக்காக சோரம்போகாது  வாக்களித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெல்லவைத்த வரலாறே இருக்கின்றது .

 இத் தேர்தலில் துறைநீலாவணை வட்டாரத்தில் பல கட்சிகள் போட்டியிட்ட போதும் அக்கட்சிகள் அனைத்தையும் நிராகரித்து என்னையும் நான் போட்டியிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் வெற்றியடைச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த மக்களை நன் ஒரு போது மறக்கமுடியாது என்னாலான உதவிகளை செய்து மக்களின் தேவைகளை ஓரளவு நிறைவேற்ற இருக்கின்றேன்
இத்தேர்தலில் நான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியட்டபோது என்னை ஆதரித்து வாக்களித்த அன்பான மக்களுக்கும் அத்தோடு  நான் போட்டியிட்ட போது எனது வெற்றிக்கும் உழைத்த கிராமத்தவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , ஊடகவியலாளர்கள் மற்றும் எனது செய்திகளைப் பிரசுரித்த அனைத்து ஊடகங்களுக்கும் அதன் ஆசிரியர்கள்  முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.