கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி பூஜை நிகழ்வுகள்

(வரதன்)
இந்துக்களின் சிவ விரதங்களில் மேன்மை பொருந்திய விரதமாக சிவராத்திரி விளங்குகின்றது. கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களிலொன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்திலும்இன்று சிவராத்திரியை முன்னிட்டு   ன்ப்பூஜைகள் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிக்ககுருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டுஆலய நிர்வாகத்தினரால் இன்றிரவு முழுவதும்  சிவனை நினைந்து விரதமிருக்கம் அடியார்களுக்களுக்காக பூஜைகளக்கிடையில் கலை கலாச்சார நிகழ்வுகளும் கதாப்பிரசங்கங்களும் இடம்பெற்றன. சிவராத்திரியை முன்னிட்டு இவ்வாலயத்தில் இடம்பெறும் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின்பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு ஈச்சரனின் அருளாசியினைப் பெற்றுச் சென்றனர்.