ஏறாவூரில் வைத்திய நிபுனரை நியமிக்க கோரி மக்கள் ஆர்பாட்டம்



(செங்கலடி நிருபர் , ஏஎம் றிகாஸ்  )

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொது வைத்திய நிபுணரை, மீண்டும் பெற்றுத்தரக்கோரி, பொதுமக்களாலும் பொது அமைப்புகளாலும், ஆர்ப்பாட்டமொன்று, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (21) நடத்தப்பட்டது.

பல்வேறு பௌதீக வளகட குறைபாடுகளுக்கு மத்தியிலும் வைத்தியர் பற்றாக்குறையுடனும் இயங்கிவரும் இவ்வைத்தியசாலையில், ஏற்கெனவே கடமையில் இருந்து வந்த பொது வைத்திய நிபுணர், கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, வைத்திய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

உடனடியாகப் பதிலீடு செய்யப்பட்டு, பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதிருக்கும் வைத்திய அத்தியட்சகரை இடம்மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரி நின்றனர்.