நெஸ்லே லங்கா நிறுவனத்தின் தேசிய விருது வழங்கும் விழாவில் முதல்தர வினியோகத்தராக மட்டக்களப்பு விஜேய் கொன்ஸ்ரக்க்ஷன் நிறுவனம் தெரிவு



நெஸ்லே லங்கா நிறுவனத்தின் தேசிய விருது வழங்கும் விழா நீர்கொழும்பு கிறிண்டீனா ஹொட்டலில் 16.02.2018 அன்று நடைபெற்றது. இலங்கையில் உள்ள நெஸ்லே பொருட்களுக்கான 136 வினியோகத்தருள் முதல்தர வினியோகத்தராக மட்டக்களப்பு விஜேய் கொன்ஸ்ரக்க்ஷன் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருதினை விஜேய் கொன்ஸ்ரக்க்ஷன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தேசகீர்த்தி வி.றஞ்சிதமூர்த்தி நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான தலைவர் சுரேஸ் நாராயணன்> நெஸ்லே நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சிவானி ஹெட்> நெஸ்லே நிறுவனத்தின் உப தலைவர் தீபால் அபேவிக்கிரம ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இவ்விருது பெற்றமை பற்றி தேசகீர்த்தி வி.றஞ்சிதமூர்த்தியிடம் கேட்டபோது தாம் 2002 ஆம் ஆண்டு இந்த வியாபாரத்தை ஆரம்பித்ததாகவும் இது தமது 15 வருட கடின உழைப்பின் வெற்றி என குறிப்பிட்ட அவர் தமது நிறுவனம் இதற்கு முன்னரும் பல விருதுகள் பெற்றிருந்தாலும் இலங்கையில் முதல்தர வினியோகத்தர் என்ற இந்த இலக்கை தற்போதுதான் எட்ட முடிந்துள்ளதாகவும்> இச்சாதனையை புரிவதற்கு உழைத்த தனது நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் இவ்விருதினை சமர்ப்பணம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.