எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைக்கு எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை.எனினும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு செய்வதற்கு எரிவாயு நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வர்த்தக வாணிப அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிவாயு அத்தியவசியமான ஒன்றாக உள்ளது. எனினும் அதன் விலை அதிகரிப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் நிறுவனங்கள் அதன் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என அனுமதிகோருவதையும் தவிர்க்க முடியாது. அந்த வகையில் எரிவாயு நிறுவனங்கள் இரண்டு விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரியுள்ளது.
எனினும் விலை அதிகரிப்பு குறித்து விலை நிர்ணயக்குழு, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு உட்பட சகல தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும்.
மேலும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுவான கொள்கைத்திட்டம் வகுப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வர்த்தக வாணிப அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிவாயு அத்தியவசியமான ஒன்றாக உள்ளது. எனினும் அதன் விலை அதிகரிப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் நிறுவனங்கள் அதன் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என அனுமதிகோருவதையும் தவிர்க்க முடியாது. அந்த வகையில் எரிவாயு நிறுவனங்கள் இரண்டு விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரியுள்ளது.
எனினும் விலை அதிகரிப்பு குறித்து விலை நிர்ணயக்குழு, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு உட்பட சகல தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும்.
மேலும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுவான கொள்கைத்திட்டம் வகுப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.