உணவுடன் மீன் சினை சாப்பிட்டதில் மயக்கமுற்ற 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்  உட்பட 6 பேர் உணவு விசமாகியதால் நேற்று இரவு செவ்வாய்கிழமை (20)  இரவு  மயக்கமுற்ற நிலையில் மட்டு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் 

காத்தான்குடி 3 ம் பிரிவு மீன் பிடி இலாக வீதியைச் சோந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை பகல் உணவில் மீன் கறியுடன் மீனின் சினையை உட்கோண்டுள்ளனர்

இந்த நிலையில் இரவு உணவு சாப்பிட்ட 6 போரும் மயக்கமுற்றதுடன்  இதனையடுத்து உடனடியாக அயலவர்களின் உதவியுடன் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வருகின்றது என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது


இதில் வயோதிப பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்பெற்று வருகின்றார் இது தொடர்பாக காத்தான்குடி பொலி சார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.