“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்” சம்பந்தன்!

தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
இன்றைய (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விஷேட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும்.
தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர். நீங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு நடந்துகொண்டால் கட்டாயம் தமிழீழம் மலரும்” என எச்சரித்தார்.