சவுதியில் இலங்கை பணிப்பெண் சுட்டுக்கொலை

சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவின் புரைடாஹ் பகுதியிலேயே கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 42 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இப்பெண்னை சுட்டுக்கொன்றவர் 30 வயது மதிக்கத்தக்க சவுதி பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெண் பணிபுரியும் வீட்டுக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பின்னர் குறித்த சவுதி பிரஜையும் தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சவுதி பிரஜை மனநலம் குன்றியவர் என்பதை கண்டறிந்துள்ளனர். அத்தோடு இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.